கவிதை

கல்லூரி காட்டுக்குள்ளே! 

கல்லூரி என்னும் 

காட்டுக்குள்ளே......... 

வகுப்பறை என்னும்............ 

கூட்டுக்குள்ளே........ 

குஞ்சு பொறித்த 

நம் நட்புக்கு........... 

சிறகுகள் முளைத்ததை 

திரும்பிப்பாருங்கள்!

புன்னகை  - ஹைக்கூ கவிதை

புன்னகை  

குண்டு மல்லியில் 
முல்லை பூக்கிறது 
அவள் புன்னகை!



நீரில் மீன்தான் பிரிந்ததடா! - நண்பர்கள் கவிதை

நீரில் மீன்தான் பிரிந்ததடா! 

நட்பெனும் கடலில்......... 

முத்தேடுக்கத்தான்......... 

இந்த மூன்றாண்டுகளோ! 

நான்காம் ஆண்டை............. 

தொட்டவுடன் என் 

கண்களில் இருந்து............. 

கசிந்ததுதான்.............. 

கண்ணீரோ! 

................................................ 


உன்னோடு........ - காதல் கவிதை

உன்னோடு........ 

உன்னோடு 
காதலி இருந்தால் 
நீயும் கா(த)லி 
உன்னை விட்டு 
விலகி சென்றால் 
நீ மட்டும் கா(த)லி............!!! 




கண்டேன் - காதல் கவிதை

கண்டேன் 

காலை நேரத்தில் கருங்குயில் கூவும் நேரத்தில் கண்ணே! 
நீ கண் விழிக்கும் அழகை கண்டேன்... 
கதிரவன் உதிக்கையில் கடும் பனி மறையும் நேரத்தில்-கண்ணே! 
உன் கலைந்த முடி அழகை கண்டேன்.. 
பூக்கள் விரியும் நேரத்தில் பட்டாம்பூச்சி பறக்கையில்-பெண்ணே! 
உன் புன்னகையின் அழகை கண்டேன்.. 
தமிழை படிக்கையில் தங்கத்தை கடிக்கையில் -பெண்ணே 
உன் உதட்டின் அழகை கண்டேன் 
மேகங்கள் கருக்கையில் மழைத்துளி தெறிக்கையில்-பெண்ணே 
உன் முகத்தினை முழு மதியாக கண்டேன்.. 
சேலை கட்டும் நேரத்தில் உன் கை பிடிக்கும் நேரத்தில்-பெண்ணை 
உன் வெட்கத்தின் அழகை கண்டேன்..




நண்பேன்டா..! - நண்பர்கள் கவிதை

நண்பேன்டா..! 


நண்பனுக்காக உயிரைக் கொடுப்பது கூட 

இலகுவானதுதான்........, ஆனால் நம் உயிரைக் 

கொடுக்கும் அளவிற்கு தகுந்த நண்பன் 

அமைவது தான் கடினமானது.........



காதலும் கண்ணீரும்!!!..........  - காதல் தோல்வி கவிதைகள்

காதலும் கண்ணீரும்!!!..........  


கண்ணீரில் கரைந்திடும் இரவுகள் காரணம் 

யாதென்று சொல்வாயா..... கேட்பதும் பெறுவதும் 

உன் செயல் கொடுப்பதும் மறுப்பதும் 

இறைவனது செயல்........ உள்ளத்து வழிதனை 

உணரும் உறவுகள் என்னரும் வெறுப்பதில்லை......



தீவிரவாதத்திற்கு  தீ  வைப்போமா…. ?? - Others

தீவிரவாதத்திற்கு தீ வைப்போமா…. ?? 

எதற்காய் 
இத்தனை 
உயிர்ப்பலிகள்....? 
எல்லாருமே 
அழிந்தபிறகு 
யாருக்கானது 
இவ்வாழ்க்கை....? 

தீவிரவாதி.... 
எல்லா 
தேசங்களையுமே 
எரிக்கின்ற 
தீ வாதி... 


மனிதத்தின் 
ஆடைகள் 
களையப்படுமானால்... 
அதில் 
மதங்களே 
தங்களை 
நிர்வாணப்படுத்திக்கொள்ளும்... 

மனிதனுக்குள் 
மறைந்திருக்கிற 
மிருகம் 
வெளியேவர 
அணிந்துகொண்ட 
முகமூடி..... 
அன்று .....போர் 
இன்று...மதம்...! 


பட்டை 
சிலுவை 
குல்லா 
இவையெல்லாமே 
மதங்களின் 
புற எச்சங்கள்... 
இல்லாமல்கூட 
வாழ்ந்துவிடலாம்... 

அன்பு 
கருணை 
அஹிம்சை 
இவைதான் 
மானுடம் 
நிலைத்திருப்பதற்கான 
மிச்சங்கள்... 
இல்லாமல் 
ஏது வாழ்க்கை ? 

இந்துவோ 
கிறித்துவரோ 
முஸ்லீமோ 
நல்லதனமாய் 
நமக்குள் 
மனிதம் இருக்க... 
நண்பர்களாய் இருப்போம்... 
கள்ளதனமாய் 
மதம் 
பிடிக்க 
எதிரிகளாய் போவோம்.. 

கீதையும் சொல்லவில்லை.. 
பைபிளும் போதிக்கவில்லை.. 
குரானும் ஓதவில்லை... 
மனிதனுக்கு 
எதிராக 
மனிதனையே 
ஆயுதம் எடுக்கச்சொல்லி.... 

அன்புதான் 
எல்லாமதங்களும் 
கற்றுத்தருகிற 
ஒரே போதனை... 
அன்புதான் 
எல்லாமதங்களையும் 
கட்டியிழுக்கும் 
பட்டு நூல்கண்டு... 

அன்பை தொலைக்க.. 
இந்துவோ 
கிறித்துவரோ 
முஸ்லீமோ 
யாராயிருந்தாலும் 
அவனே தீவிரவாதி.... 

அன்பை விதைக்க... 
இந்துவோ 
கிறித்துவரோ 
முஸ்லீமோ 
யாராயிருந்தாலும் 
அவனே 
உண்மையான மதவாதி... !!!!! 


நிறைவேறாத ஆசை...  - காதல் தோல்வி கவிதைகள்

நிறைவேறாத ஆசை...  

நீ... 
நிலவு என்று... 
புரிந்து கொண்டேன்.. 


உன்னை.. 
தூரத்தில் இருந்து ரசிக்கிறேன்.. 
நெருங்க மாட்டேன்... 



இனி ஒரு பிறவி இருந்தால்.. 
உன்... 
அருகில் சுற்றி வரும் சூரியனாய்... 
அவதரிப்பேன்... 



என்றும்... 
உன் நினைவுகளை மட்டும் சுமந்து 

சுற்றிவரும் நான்..




கைபேசி அடிமை  

கணிணியிலும் இணைய இணைப்பு இல்லை 
கைபேசியிலும் இதே தொல்லை 
இறந்து விட்ட பின் என் கனவில் 
இந்த அதிசயம் நடந்து தொலைக்கிறது 










அன்னை  - Others

அன்னை  

பத்து மாதம் சுமந்து 
பத்திரமாய் நம்மை வளர்த்து 
பாத்திரமாய் நம்மை உலகினில் 
பரப்பியவள் 




muttham 

முதல் மழை வானத்தை பார்த்து 
நான் ரசித்த போது 
எத்ரிபராமல் நீ கொடுத்த முத்தம் 
அந்த முத்தம் 
இன்றும் ஈராமாக 
என் கன்னத்தில் ........




காலமா, நானா  வெற்றியாளன் ? - வாழ்க்கை கவிதை

காலமா, நானா வெற்றியாளன் ? 

இரண்டு நிமிடத்தின் முயற்சியில் 
நூறு அடிகள் ஓடிவிட்டேன் 
நூற்றி இருபது நொடிகளை கடந்து 
கால தாமதமாய் இருந்து கொள்கிறது 
இருண்ட நேரம் 







 உன் தவறிய அழைப்புகள்...!!! - கைபேசி கவிதைகள்

உன் தவறிய அழைப்புகள்...!!! 

கைபேசியை வீட்டில் மறந்து 
வைத்துவிட்டு 
பாதி வழியில் உன் நினைவு வர 
அடித்து பிடித்து 
அவசர அவசரமாய் திரும்பி 
வீட்டிற்கு வருவதற்குள், 

உன் பெயரில் வந்திருந்த எண்ணற்ற 
அழைப்புகளை 
பார்த்துவிட்டு 
நீ பேச இருந்த அன்பான 
வார்த்தைகள் எதையுமே 
கேட்கமுடியாமல் அவைகள் 
அனைத்தும் 
குருஞ்செய்திகளாய் மாறி இருப்பதை 
படிக்கும் தருணங்களில், 
தாலாட்டை பாட முடியாத 
ஊமைத் தாயின் மடியில் தவழும் 
சிறு குழந்தையாய் உணர்கிறேன் ...!!! 







Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.