சச்சினுக்கு சிட்னி கிரிக்கட் மைதானத்தின் நிரந்தர உறுப்பினர் விருது


சச்சினுக்கு சிட்னி கிரிக்கட் மைதானத்தின் நிரந்தர உறுப்பினர் விருது

இந்தியாவின் நட்சத்திர கிரிக்கட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு, சிட்னி கிரிக்கட் மைதானத்தின் நிரந்தர உறுப்பினர் விருது வழங்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியா சென்றுள்ள இந்திய கிரிக்கட் அணி, முத்தரப்பு தொடரில் விளையாடி வருகிறது.
அங்கு நடந்த விழாவில், இந்திய அணியின் நட்சத்திர துடுப்பாட்ட காரர் சச்சின் டெண்டுல்கருக்கு சிட்னி கிரிக்கட் மைதான வாரியம், நிரந்தர உறுப்பினர் விருதினை வழங்கி கௌரவித்துள்ளது.
இதில் கிரிக்கட் உலகில் சச்சின் டெண்டுல்கர் படைத்த சாதனைகள், அவரின் பெருமைகள் குறித்து பாராட்டு மழை பொழியப்பட்டது. இவ்விருதை நியூசெளத்வேல்ஸ் முதல்வர் பெர்ரி ஓ.பாரல் சச்சினுக்கு வழங்கி கெளரவித்தார்.
இவ்விருதினை பெரும் முதல் இந்திய துடுப்பாட்டக் காரர் சச்சின் என்பது குறிப்பிடத்தக்கது.
நடந்து முடிந்த அவுஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் எப்படியும் சதத்தில் சதமடிப்பார் (100/100) என எல்லோராலும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சச்சினுக்கு கிடைத்திருக்கும் விருது அவரது புகழுக்கு மேலும் பெருமை சேர்த்துள்ளதாக, சிட்னி கிரிக்கட் மைதான வாரியத்தின் தலைவர் ‌ரோட்னி காவ்லியர் தெரிவித்தார்.
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.